districts

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு சிறை

தஞ்சாவூர், டிச.28 -  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள திருப்பழனம் மேலத்தெரு வைச் சேர்ந்தவர் அய்யப்பன் (30). இவர் 2016, ஏப்ரல் 30 ஆம் தேதி 9 வயது சிறுமி யை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து அய்யப் பனை கைது செய்தனர்.  இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ  சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்  ராஜன் விசாரித்து அய்யப்பனுக்கு 7 ஆண்டு கள் சிறை தண்டனையும், ரூ.15,000 அப ராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார். இதேபோல, ஒரத்தநாடு அருகேயுள்ள மாஞ்சான்காடைச் சேர்ந்தவர் பிரசாத் என்கிற பாண்டித்துரை (32). இவர் 2018,  ஆகஸ்ட் 27 ஆம் தேதி குளத்தில் குளிப்ப தற்காகச் சென்று கொண்டிருந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து பிரசாத்தை கைது செய்த னர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ  சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்  பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி.சுந்தர் ராஜன் விசாரித்து பிரசாத்துக்கு 10 ஆண்டு கள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராத மும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்  கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கு  மாறு அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.