districts

குடிமனைப் பட்டா பிரச்சனைகள் சரி செய்யப்படும் வட்டாட்சியர் உறுதி: போராட்டம் ஒத்திவைப்பு

பூதலூர், டிச.30-  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு  ஒன்றியத்தில், தமிழக அரசால் வழங்கப்பட்ட  இலவச குடிமனைப் பட்டாவை அரசு போக்கு வரத்துக் கணக்கில் ஏற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர்  தெற்கு ஒன்றியம் சார்பில் பூதலூர் வட்டாட்சி யர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.   இந்நிலையில் வியாழக்கிழமை மாலை பூதலூர் வட்டாட்சியர் ஞா.பெர்சியா தலை மையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடை பெற்றது.  இதில், காவல்துறை சார்பில் திருமால்,  குணா, வருவாய் ஆய்வாளர் முருகா னந்தம், கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல் வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி. கண்ணன், ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர்,  மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி, ஒன்றிய குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.  பேச்சுவார்த்தையில், “இலவச குடிமனை  பட்டா தொடர்பான விவரங்களை அரசு  போக்குவரத்து கணக்கில் ஏற்ற உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்படும்” என வட்டாட் சியர் தெரிவித்ததையடுத்து போராட்டம் கை விடப்பட்டது.