தஞ்சாவூர், ஜூலை 16- வாசிப்பு பழக்கம் நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமானது என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தஞ்சாவூர் அரண்மனை மைதா னத்தில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய புத்தகத் திருவிழாவைத் திறந்து வைத்த அவர் பேசுகையில், “சென்னையில் மட்டும் பபாசி புத்தகக் கண்காட்சி நடைபெற்றால் போதாது; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத் திலும் புத்தகக் கண்காட்சியும், இலக்கிய விழாவும் நடத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். இதற்காக ரூ.5.60 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளார். நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கும் இப்புத்தகக் கண்காட்சி யில் இலக்கிய அரங்கம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை, சிந்தனை அரங்கங்கள் நடைபெறவுள்ளன. இந்தப் புத்தகக் கண்காட்சிக்காகப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.14 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே திராவிட இயக்க கொள்கைகளில் ஒன்று. அறிவு சார்ந்த இயக்கம் என்கிற போது மொழியின் இருப்பிடமாகக் கரு தப்படுவது இலக்கியம். இந்த இலக்கியம் அறிவு சார்ந்த சமுதா யத்தை உருவாக்கும் என்ற நம்பிக் கையை திராவிட இயக்கம் பெற்றுள் ளது. மாணவர்கள் நிறைய புத்தகங் களைப் படிக்க வேண்டும். வாசிப்பு பழக்கம் நம் வாழ்க்கைக்கு மிக முக்கிய மானது. எனவே, புத்தக வாசிப்பை குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டும்” என்றார். விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன், மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக் கம், துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.