தஞ்சாவூர், நவ.14- அதிகாரிகளிடம் பல முறை தகவல் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கா ததால் பெண்கள் சாலையில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், மணக்காடு ஊரா ட்சிக்கு உட்பட்ட நெல்லிய டிக்காடு கிராமம், காளியம் மன் கோயில் தெருவில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இப்பகு தியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. 200-க்கும் மேற்பட்ட மக் கள் உள்ள இப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஊராட்சி ஒன்றிய நிர்வா கத்திடம் முறையிட்ட நிலை யில், சுமார் 500 மீட்டர் தூரத் திற்கு வடிகால் வசதி ஏற் படுத்தப்பட்டது. ஆனால் சுமார் 200 மீட்டர் தூரம் வரை கண்டு கொள்ளாமல் அப்ப டியே விடப்பட்டது. இதன் காரணமாக சிறிது தூரம் தண் ணீர் தேங்கி நிற்கிறது. இத னால் பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமப்படுகின் றனர். மேலும், தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நட வடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இத னால் இப்பகுதி பொதுமக் கள், திங்கள்கிழமை சாலை யில் நாற்று நட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். இப்போராட் டத்துக்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வீ.கருப் பையா தலைமை வகித்தார். சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.