தஞ்சாவூர், ஏப்.27 - திருச்சி கோட்ட ரயில் உபயோகிப்போர் ஆலோ சனைக் குழு உறுப்பினராக பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என்.ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை இப்பொறுப்பிற்கு, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் நியமித்துள்ளார். ஜனவரி 2022 இல் இருந்து டிசம்பர் 2023 வரை இப்பொறுப்பில் இருப்பார். பட்டுக்கோட்டை வட்ட பயணிகள் நலச் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற காலம் முதல், என்.ஜெயரா மன், ரயில்வே நிர்வாகத்திற் கும், ரயில் பயணிகளுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டு வருகிறார். மேலும், திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் பணி யில் நில ஆர்ஜிதம், கட்டு மான பணிகளுக்கு ரயில்வே நிர்வாகத்திற்கு உதவி செய்தல் மற்றும் இத்தடத் திற்கு தேவையான ரயில் களைப் பெற, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சு.பழநிமாணிக்கம் உதவி யுடன், தில்லி ரயில்வே வாரி யத் தலைவர், சென்னை தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் உள்ளிட்ட பலரையும் சந்தித்து கோரிக்கை வைத்ததில் முன்னணியில் நின்றார். என்.ஜெயராமன் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தி லும், பட்டுக்கோட்டை மருந்து வணிகர் சங்கத்தி லும், பட்டுக்கோட்டை பெரிய தெரு நாடியம்மன் கோயில் தேர்த் திருவிழா கமிட்டி போன்ற அமைப்புகளில் பொறுப்பாளராக இருந்து சேவை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பொறுப்பேற்றுள்ள என்.ஜெயராமனுக்கு ரயில் உபயோகிப்பாளர் சங்கம், வர்த்தக சங்க நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.