districts

img

பொது கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்குக! நெடுஞ்சாலைத்துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், மே 26 - பொது கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க  வேண்டும், நிலுவை கோரிக் கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் நெடுஞ்சா லைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகம் முன்பு புத னன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ரெங்கசாமி முன் னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் கே.பாஸ்கரன், துணைத் தலைவர் ரவிச்சந்தி ரன், வடக்கு வட்டச் செயலா ளர் அஜய் ராஜ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தனசேகரன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், நெடுஞ் சாலைத் துறையிலும் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். அனைத்து காலிப்பணியி டங்களையும் உடனடி யாக நிரப்ப வேண்டும். நிலு வையில் உள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறை வேற்றித் தரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன.