தஞ்சாவூர், ஜூன்.19 - சின்ன கழனிவாசல் கிராமத்தில் சேத மடைந்த நிலையில் உள்ள பேருந்து நிழற்குடையை சீரமைத்துத் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொறுப்பாளர் சிவ னேசன் மற்றும் கிராம மக்கள் கையெழுத்தி ட்டு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
அந்த மனுவில், “தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் கழனிவாசல் ஊராட்சி, சின்ன கழனிவாசல் கிராமத்தில் சிவன் கோயிலுக்கு முன்பாக, நெடுஞ்சாலையில் உள்ள நிழற்குடை பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது அந்த நிழல் குடை சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. கட்டடம் சிதிலமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் அதில் இருக்கை வசதிகள் இல்லாததால் பயணிகள், பொதுமக்கள், மாணவ, மாணவி கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மழை, வெயில் காலங்களில் இந்த நிழல் குடைக்குள் நிற்க பொதுமக்கள் அச்சப் படும் நிலை உள்ளது. மேலும், நிழற்குடைக் கும் சாலைக்கும் இடையே வாய்க்கால் உள்ளது. இதில் தண்ணீர் செல்லும் நேரத்தில் பள்ளமாக இருப்பதால் பொது மக்கள் நிழற் கூடையை பயன்படுத்த முடி யாத நிலை உள்ளது. எனவே, இதனை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது வாய்க்காலுக்கு மேல் பாதை அமைத்து புதிய நிழற் குடை அமைத்து தர வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.