தஞ்சாவூர், அக்.2- தஞ்சாவூர் மாவட்டம் மத்திய-மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஓய்வூதியர் பாதுகாப்பு கருத்தரங்கங்கள் சனிக்கிழமை தஞ்சையில் நடைபெற்றன. அக்டோபம் 1, உலகம் முழுவதும் ஓய்வூதியர் தினமாக கடைப்பிடிக்கப்படு கிறது. சோவியத் புரட்சி முடிந்து தொழிலா ளர் வர்க்கத்தின் ஆட்சியில் தோழர் லெனின் பிறப்பித்த மூன்றாவது உத்தரவு சமூக பாதுகாப்பு குறித்த உத்தரவுதான். அப் போது லெனின், “இன்றைய சமூகம் நிலைத்து நிற்பது நமது மூத்தோர்களின் உழைப்பால்தான். அவர்களைப் பாது காப்பது இன்றைய சமூகத்தின் கடமை” என்றார். அதுதான் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் சோவியத் யூனியன் தகர்ந்த பின்னர், இன்றைய தினம் தொழிலாளர் வர்க்கம் பெற்ற உரிமைகள், சமூக நலத் திட்டங்கள் என ஒவ்வொன்றாகப் பறிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை என்பது மட்டு மல்ல இருக்கின்ற வேலைகளும் பல வடி வங்களில் பறிக்கப்பட்டுக் கொண்டிருக் கின்றன. அதேபோன்று ஓய்வூதியர்களுக்கு அளிக் கப்பட்டு வந்த ஓய்வூதியமும் படிப்படியா கப் பறிக்கப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதனை எதிர்த்து அனைத்து ஓய்வூதியர்களும் ஒன்றுபட வேண்டிய அவ சியம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணி யில்தான் தஞ்சாவூரில் ஓய்வூதியர் பாது காப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு ந.குருசாமி தலைமை வகித்தார். இரா. கலியமூர்த்தி, பெ.முனி யாண்டி, எஸ்.ஞானசேகரன், இரா.தமிழ்மணி, இரா.புண்ணியமூர்த்தி ஆகியோர் உரை யாற்றினர். தட்சிண ரயில்வே ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் ஆர்.இளங்கோவன் கருத்துரையாற்றினார். என்.பாஸ்கரன் நன்றி கூறினார்.