districts

img

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான நூல்கள் வழங்கல்

தஞ்சாவூர், மார்ச்.3- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம், தஞ்சாவூர் மாவட்ட கிளையின் சார்பில், இல்லம் தேடி கல்வி மையங்களில் பயி லும் மாணவர்களின், வாசித்தல் திறன் மேம்பட ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள சிறுவர் இலக்கிய நூல்கள், தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.சிவக்குமாரிடம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களால் முதன்மைக் கல்வி அலுவல கத்தில் வழங்கப்பட்டது.  நிகழ்வில், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் தமிழ்செல்வன், கணேஷ் குமார், அருண், ஒருங்கிணைப்பா ளர்கள் சரிதா பாலா, ஒரத்தநாடு கல்வி மாவட்ட ஒருங் கிணைப்பாளர்கள் அடைக்கலம், செந்தமிழ், தஞ்சாவூர் மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் அருண்குமார், சார்லி தேவபிரி யன், ராமச்சந்திரன், சதீஷ்குமார், கும்பகோணம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கலை மாறன். கோபால், சுந்தர்ராஜ், அழகர், பள்ளிக்கல்வி பாது காப்பு இயக்க ஆர்வலர் வள்ளி மணாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  பாராட்டு  மூத்தாகுறிச்சி பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சரிதாபாலா, கும்பகோணம் வேப்பணந்திடலில் வீதி வகுப் பறை நடத்தி வந்த கோபால், சில்லத்தூர் தெற்கில் வீதி வகுப்பறை நடத்தி வரும் செந்தமிழ், கலைக்குழுவிற்கு ஒத்துழைப்பு நல்கிய திருப்ப னந்தாள் கலைமாறன் ஆகியோ ருக்கு தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர் எம்.சிவக்குமார் பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் இதயராஜா செய்திருந்தார்.