districts

முதியவருக்கு 20 ஆண்டு சிறை

தஞ்சாவூர், செப்.24 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பந்த நல்லூரை அடுத்த கெளுத்தி யூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நா. பன்னீர்(63). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 20  ஆம் தேதி, தனது நண்ப ரின் பேத்தியான 11 வயது  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி  பெற்றோரிடம் கூறியதை யடுத்து, பெற்றோர் பந்தநல்லூர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் புகாரை விசாரித்து பன்னீரை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சாவூர் மகளிர் மற்றும் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜன் குற்றம் சாட்டப் பட்ட முதியவர் பன்னீருக்கு  20 ஆண்டு சிறை தண்டனை யும், ரூ.20 ஆயிரம் அபராத மும் விதித்து தீர்ப்பளித்தார்.

;