districts

மானிய விலையில் பெட்ரோல்-டீசல் வழங்குக! ஆட்டோ தொழிலாளர்கள் வலியுறுத்தல்

கும்பகோணம்,  மே 24 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்க கும்ப கோணம் பகுதி ஒன்பதாவது பேரவை கும்பகோணத்தில் நடைபெற்றது. பேரவைக்கு மாநகர செய லாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க  உறுப்பினரும் கும்பகோ ணம் மாநகராட்சி மேயரு மான சரவணன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெய பால், மாவட்ட பொருளாளர் கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் சா.ஜீவபாரதி, பார்த்தசாரதி, மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் சங்கர்  ஆகியோர் சிறப்புரையாற்றி னர். ஆட்டோ தொழிலாளர் களுக்கு ஒன்றிய அரசு மானிய விலையில் பெட்ரோல்-டீசல் வழங்க வேண்டும். ஆர்டிஓ அலுவல கங்களில் ஆட்டோ தொழி லாளர்களிடம் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். கும்ப கோணம் மாநகரில் இயங்கி வரும் ஆட்டோ ஸ்டாண்ட்டு களுக்கு தனித்தனியாக நிரந்தர இடம் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் தலைவராக சங்கர், செயலாளராக கார்த்திகேயன், பொருளா ளராக மகாராஜா, துணை செயலாளராக விஜய் சங்கர்,  மணி, துணைத் தலைவராக சதீஷ், பிரபு, கௌரவத் தலைவராக செந்தில்குமார் உட்பட 21 பேர் கொண்ட நகரக் குழு தேர்வு செய்யப் பட்டது.