districts

img

அக்.2 மனிதநேய நல்லிணக்க மனிதச் சங்கிலி ஆதரவு கேட்டு அனைத்து கட்சிகள் பிரச்சாரம்

தஞ்சாவூர், செப்.29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தை  கட்சி அக்டோபர் 2-ல், தமிழகத்தில் சமூக நல்லி ணக்கத்தை வலியுறுத்தி, மனிதச் சங்கிலி  நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.  இந்தப் போராட்டத்தில் சமூக நல்லி ணக்கத்தை விரும்புகின்ற அனைத்துக் கட்சி கள், ஜனநாயக அமைப்புகள், இயக்கங்கள்  அனைவரும் பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சி கள், இயக்கங்கள், அமைப்புகள் ஆதரவ ளித்துள்ளன.    இதையொட்டி, தஞ்சை மாவட்டத்தில் நடைபெற உள்ள மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பு பொதுமக்களும், உழைக்கும் தொழிலாளர்களும், ஜன நாயக சக்திகளும் பங்கேற்க வேண்டி  அனைத்து கட்சிகள் சார்பில் வியாழனன்று தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடமும், தொழிலாளர்களிட மும் துண்டுப் பிரசுரம் விநியோகித்து ஆத ரவு திரட்டப்பட்டது.        

    இந்நிகழ்ச்சிக்கு, சிபிஎம் மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். சிபிஐ தெற்கு மாவட்டச் செய லாளர் முத்து உத்திராபதி, வடக்கு மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி, விசிக மாவட்டச் செயலாளர் சொக்கா ரவி ஆகியோர் முன்  னிலை வகித்தனர்.  இந்நிகழ்வில் சிபிஎம் நிர்வாகிகள் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன், பி.செந்தில்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் என்.சரவணன், மாநகரக் குழு கரிகாலன், கோஸ்கனி, சி.ராஜன், கே. அன்பு, சிபிஐ நிர்வாகிகள் என்.பாலசுப்பிர மணியன், ஜார்ஜ் துரை, தி.திருநாவுக்கரசு வெ.சேவையா, தி.கோவிந்தராஜன், த. கிருஷ்ணன், ஆர்.பி.முத்துக்குமரன், விசிக  நிர்வாகிகள் கோ.ஜெய்சங்கர், தமிழ் முதல்  வன், யோகராஜ், தமிழ்ச்செல்வி, சிவ தமிழ்நீதி, சுரேஷ், முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன், ஏஐடியூசி மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதி வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.