districts

சம்பா பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் : வேளாண் துறை விளக்கம்

தஞ்சாவூர், டிச.4 -  சம்பா பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறை கள் பற்றி விவசாயிகளுக்கு வேளா ண்மை உதவி இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.  இதுகுறித்து, பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) எஸ்.ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பு வருடம் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் குறிப்பாக நடவு செய்யப்பட்ட நெற் பயிரில் தட்பவெப்ப மாறுதல்களினால் செங்கமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆனைக் கொம்பன் ஈ என்ற பூச்சியின் தாக்கு தல் பொருளாதார சேத நிலைக்குள் காணப்படுகிறது.

நெல் நடவு செய்த 30 முதல் 40 நாட்களில் புழுக்களின் தாக்கம் அதிகம் காணப்படும். இந்த பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாக வும், கொசுவை போல சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக் கும். இதன் வாழ்க்கை சுழற்சியானது 14 முதல் 21 வரை நாட்களை கொண் டது.

இந்த ஈ தாக்குதலினால் நெற்பயி ரில் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் வெண்மை நிறத்திலோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ வெங்காய இலையைப் போல் தோன்றும்.  பார்ப்பதற்கு யானையின் கொம்பை போன்ற தோற்றத்தில் இருக்கும். தாய் ஈக்கள் சராசரியாக 100 முதல் 150 முட்டைகள் வரை இலை கள், தாள்களின் மேல்புறம் இடும். இதி லிருந்து வரும் புழுக்கள் நெற்பயிர்க ளின் குருத்துக்களை துளைத்து குழல்களால் மாற்றிவிடும்.

இதனால் பயிரின் தூர்களில் நெற்கதிர்கள் உரு வாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், நெல் வயலில் களைகள் இல்லா மல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். விளக்குப் பொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்க லாம். ஆனைக்கொம்பன் நோய்க்கு எதிர்ப்பு திறனுடைய குறுகிய கால ரகங்களான ஏடிடி 45 போன்ற ரகங்க ளை பயிரிடுதல் வேண்டும். பரிந்துரைக் கப்பட்ட அளவுக்கு மேல் தழைச்சத்து உரங்களை பயன்படுத்தக் கூடாது.

பரிந்துரைக்கப்பட்ட அளவு பொட்டாஷ் உரத்தினை இட வேண்டும்.  ஆனைக்கொம்பனின் இயற்கை எதிரிகளான நீள்தாடை சிலந்தி, வட்ட சிலந்தி, ஊசித்தட்டான் குளவி போன்றவற்றை அழியாமல் பாது காக்க வேண்டும். 10 சதவீதத்துக்கும் மேல் தாக்குதல் தென்பட்டால், ஏக்கரு க்கு பிப்ரோனில் 5 சதவீத எஸ்.சி 500 கிராம் அல்லது ஏக்கருக்கு பிப்ரோ னில் 0.3 சதவீத ஜி 10 கிலோ அல்லது  ஏக்கருக்கு தயோமீதாக்ஸம் 25 சதவீத 40 கிராம் இந்த ரசாயன கொல்லி மருந்து களில் ஏதாவது ஒரு மருந்தை ஒரு ஏக்க ருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

 விவசாயிகள் தங்களது நெல் வயலை அடிக்கடி கண்காணித்து பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைத்து நெற்பயிரில் ஆனை க்கொம்பன் ஈ தாக்குதலை முற்றிலும் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.  மேலும், தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர் அல்லது வேளாண் அலுவலரை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று உடனடியாக ஆணைக் கொம்பன் ஈ தாக்கலிலிருந்து பயிரைக் காப்பாற்ற நடவடிக்கை கள் மேற்கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.