districts

கும்பகோணம் - திருப்புறம்பயம் வழியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை இயக்குக! மாணவர் - வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

கும்பகோணம், பிப்.27 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை தலைமையகமாக கொண்ட அரசு போக்கு வரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் கும்ப கோணம் - திருப்புறம்பயம் வழித்தடங்களில் தடம் எண்6. மற்றும் தடம் எண்.18 வழித்த டத்தில் 65 ஆம் நம்பர், ஆறாம் நம்பர் மற்றும்  72 ஆம் நம்பர் நகர பேருந்துகள் திருப்புறம்பி யம், குடிதாங்கி, கொந்தகை, இன்னம்பூர், புளி யம்பட்டி, உத்திரை வழியாக கும்பகோணத் திற்கு வந்து கொண்டிருந்தன. அதில் ஏராளமான பள்ளி-கல்லூரி மாண வர்கள், வேலைக்கு செல்பவர்கள் என காலை யில் அப்பேருந்துகளை பயன்படுத்தி வந்தனர்.  ஆனால் திடீரென்று நகரப் பேருந்து எண்.65  மற்றும் 72 எவ்வித அறிவிப்பும் இன்றி பிப்.24  ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகு தியில் வந்த ஒரே நகரப் பேருந்தான ஆறாம் நம்பரில் மாணவர்கள், பொதுமக்கள் ஏராள மானோர் ஏறினர். ஆனால் இன்னம்பூர் பகுதி யிலேயே பேருந்து பழுதாகி இடதுபுறம் சாயும் நிலைக்கு சென்று மாணவர்கள் விபத்துக் குள்ளாகும் நிலை ஏற்பட்டது. அதனால் அப்பகுதிக்கு வந்த இந்த பேருந்தும் இயக்கப் படாமல் போனதால், மாணவர்கள் பேருந்தி லிருந்து இறக்கப்பட்டு பள்ளிக்கு செல்ல முடியாமல், வீட்டிற்கு திரும்பி சென்றனர். கடந்த 30 வருடங்களாக திருப்புறம்பியம்  - கும்பகோணம் வழித்தடத்தில் வர வேண்டிய பேருந்துகள் குறைக்கப்பட்டதனால், ஒரே  பேருந்தில் அனைவரும் ஏறும் நிலை ஏற்பட்டு  விபத்து நடக்க அதிக வாய்ப்புள்ளது.  இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கத்தினர் கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரி களை போனில் தொடர்பு கொண்டாலும் பதில்  கிடைப்பதில்லை. எனவே உடனடியாக, எப்போதும் செல்லும் 65 மற்றும் 72 ஆம் எண்  நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்கி மாண வர்கள்-பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென  வாலிபர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலை நீடித்தால் விரைவில் கும்பகோ ணம் அரசு போக்குவரத்து கோட்ட நிர்வா கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்  எனவும் தெரிவிக்கப்பட்டது.