பேராவூரணி, ஜன.5- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், காந்தியப் பொருளாதார மேதை ஜே.சி.கும ரப்பாவின் 131-ஆவது பிறந்த நாள் விழா நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு தனியார் பள்ளி கள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்து, ஜே.சி.குமரப்பாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பள்ளி நிர்வாக இயக்குநர் எம்.நாகூர் பிச்சை, குமரப்பா அறக்கட்டளை பொருளா ளர் அஸ்வின் ஸ்ரீதர், பள்ளி முதல்வர் சிந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.