districts

img

திருபுவனம் திகோ சில்க்ஸில் ஆதாயப்பட்டு திருவிழா ஆரம்பம்

கும்பகோணம், மார்ச் 18 - இந்தியாவின் பட்டு விற்ப னையில் முதன்மை நிறுவனமான திகோ சில்க்ஸ் என்றழைக்கப்படும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கடந்த பிப்ரவரி 10 முதல்  மார்ச் 14 வரை மாசித் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. வாடிக்கையாளர்கள் பெரிதும் பயனடையும் சில திட்டங்களை தொடர்ந்து நடத்த கேட்டுக் கொண்ட தன் அடிப்படையில், மார்ச் 18 முதல் மார்ச் 30 வரை ஆதாயப்பட்டு திரு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் 10 சதவீதம் முதல் 50  சதவீதம் வரை தள்ளுபடி சேலை கள் விற்பனை மேளா, உலக மக ளிர் தினத்தை முன்னிட்டு புதிய பட்டு சேலை வாங்கும் மகளிர் அனை வரும் முக்கிய நபராக கருதப்பட்டு, 5  சதவீத தள்ளுபடி கூடுதலாக வழங்கு வது, பழசுக்கு புதுசு திட்டத்தின் கீழ் பழைய வெள்ளி ஜரிகை பட்டு புடவைகள் மாற்றப்படும் என திகோ சில்க்ஸ் மேலாண்மை இயக்குனர் செல்வம் தெரிவித்துள்ளார்.