தஞ்சாவூர், பிப்.1 - தஞ்சாவூர் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலில், தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜன.28 முதல் நடைபெற்று வருகிறது. மனுத்தாக்கல் செய்ய பிப்.4 ஆம் தேதி கடைசி. தஞ்சாவூர் மாநக ராட்சி பகுதியில் 51 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் அலுவ லர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் நிய மிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் மொத்தம் 196 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, இதில் 1,98,597 வாக்காளர்கள் வாக்களிக்க வுள்ளனர். மேலும், தஞ்சாவூர் மாநகராட்சி யில் வடக்கு வாசல், மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் 2 வாக்குச்சாவடிகளும், வடக்கு வாசல், ஜான் டி பிரிட்டோ நடுநிலைப்பள்ளி யில் 1 வாக்குச்சாவடியும், வடக்கு வீதி, செயிண்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 1 வாக்குச் சாவடியும், கரந்தை, மாநகராட்சி நடு நிலைப்பள்ளியில் 2 வாக்குச் சாவடிகளும், தென்கீழ் அலங்கம், மாநகராட்சி மேல்நி லைப்பள்ளியில் 1 வாக்குச் சாவடியும், மிஷன் ஆலமரத்தெரு, டி.இ.எல்.சி. நடு நிலைப்பள்ளியில் 1 வாக்குச்சாவடியும், வண்டிக்காரத்தெரு, மாநகராட்சி நடுநி லைப்பள்ளியில் 2 வாக்குச் சாவடிகளும், பூக்காரக் கோயில் தெரு, செயிண்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4 வாக்குச்சாவடிகளும், கணபதி நகர், செல்வ ராஜ் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 5 வாக்குச் சாவடிகளும், கண்ணன் நகர், குந்தவை நாச்சி யார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 4 வாக்குச்சாவடிகளும், வல்லம் ரோடு, மன்னர் சரபோஜி அரசினர் கலைக்கல்லூரியில் 5 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 28 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்கு சாவ டிகள் ஆகும். இதில் வண்டிக்காரத்தெரு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள 2 பதற்றமான வாக்கு சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வை யிட்டு ஆய்வு செய்யப்பட்டது என்றார்.