தஞ்சாவூர், ஏப்.12 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறை, அச்சகம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டினை முன்னிட்டு 50 விழுக்காடு சிறப்பு தள்ளுபடி விலையில், ஏப்.18 முதல் மே 17 ஆம் தேதி வரை நூல் விற்பனை செய்யப்பட உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் (பொ) முனைவர் க.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழின் பன்முகக் கூறுகளை ஆராய்வதும், ஆவணப்படுத்து வதும் என பல நிலைகளில் தமிழ்மொழி, கலை, பண்பாடு, அறிவியல் தளங்களை தமிழ் மக்களிடையேயும், உலகத் தமிழ் மக்களிடை யேயும் எடுத்துச் செல்வதில் தமிழ்ப் பல்கலைக் கழகம் முனைப்போடு முன்னெடுத்து செயல் பட்டு வருகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரி யர்கள் மட்டுமின்றி தமிழ் உலகின் தலை சிறந்த ஆய்வறிஞர்களின் படைப்புகள், பழந்த மிழ் இலக்கியங்கள், அகராதி மற்றும் களஞ் சியங்கள் எனப் பலவகை நூல்களையும் ஆழ மாகப் பதிவு செய்து அவற்றை நூல்களாக வெளியிடும் அரும்பெரும் பணியைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை மேற் கொண்டு வருகிறது. பொதுமக்கள் தள்ளுபடி விலையில் அரிய நூல்களை வாங்கிப் பயனுறும் வகை யில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பல்கலைக் கழகத் தொடக்க நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் போன்ற விழாக்களின்போது 50 விழுக்காடு சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாண்டும் (2022 ஆம் ஆண்டு) தமிழ்ப் புத்தாண்டினை முன்னிட்டு (சித்திரை 1 ஆம் நாள் முதல் 4 ஆம் நாள் வரை அரசு விடு முறை என்பதால், சித்திரை 5 ஆம் நாள் முதல் (18.4.2022 முதல் 17.5.2022) வரை 30 நாட்களுக்கு 50 விழுக்காடு சிறப்பு தள்ளு படி விலையில் நூல்கள் விற்பனை நடைபெற வுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை மாணவர் களும், ஆய்வாளர்களும், தமிழ் அறிஞர் களும், பொதுமக்களும், பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், அண்டை மாநிலம், அயல்நாட்டுத் தமிழ் மக்கள் ஆகியோர் இணைய தளத்தின் மூலமாகவும் பயன்படுத் திக் கொள்ளும் வகையில், 9489102276 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்நூல்கள் பதிப்புத்துறை, விற்பனைப் பிரிவு, வாகை வளாகம், (புதிய வளாகம்) திருச்சி நெடுஞ்சாலை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் கிடைக்கும்” என கூறப்பட்டுள்ளது.