தஞ்சாவூர், மே 10 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில், எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் குறைகளைத் தீர்க்கும் வகையில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மே 12 (வியாழக் கிழமை) மாலை 4 மணிக்கு கூடுதல் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. தஞ்சாவூர் வட்டத்தில் உள்ள எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர், எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதில் உள்ள சிரமம், வழங்குவதில் காலதாமதம், அரசு மானியம், நுகர்வோர் வங்கிக் கணக்கில் வரவு வைத்தல் போன்றவற்றில் குறைபாடுகள் குறித்து வரும் புகார்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுத்து, எண்ணெய் நிறுவன விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்த குறை தீர் கூட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே, எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமும் நேரி லும் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்து உள்ளார்.