தஞ்சாவூர், ஜூலை 11 - தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகு படி 43,000 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப் பட்டு தற்போது வரை 40,545 ஹெக்டேர் சாகு படி செய்யப்பட்டு உள்ளது. குறுவை சாகு படிக்கு தேவையான உரங்களான யூரியா 5,432 மெ.டன்னும், டி.ஏ.பி 2,797 மெ. டன்னும், பொட்டாஷ் 2,533 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 2,951 மெ.டன்னும் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூல மாக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப் பட்டு வருகிறது. டி.ஏ.பி. பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களின் விலையேற்றத்தை தொடர்ந்து, விவசாயிகள் அதிகளவு யூரியாவை பயன் படுத்தி வருகின்றனர். யூரியா விற்பனை செய்யும் போது, விவசாயிகளின் விருப்பத் திற்கு மாறாக இதர இணை பொருட்களை வாங்குமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என முன்னரே எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் உர விற்பனையாளர்கள், கூடுதல் இடுபொருட் களை வாங்க கட்டாயப்படுத்துவதாக விவ சாயிகளிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். உர விற்பனையாளர்கள் தங்களிடமுள்ள உர இருப்பையும், விலையையும், விலை விவரப் பலகையில் எழுதி கடைக்கு முன்பாக விவசாயிகளின் பார்வைக்கு வைக்க வேண்டும். உரங்களை இருப்பு வைத்துக் கொண்டு விவசாயிகளுக்கு தர மறுக்கக் கூடாது. மேலும், அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். யூரியா விற்பனை செய்யும் போது விவசாயிகளின் விருப்பத் திற்கு மாறாக கூடுதல் இணை பொருட்களை வாங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. உரக் கட்டுப்பாடு சட்டம் 1985 விதிமுறை களுக்கு முரணாக செயல்படும் உரக்கடை கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வ தோடு, விதிமுறைகளை மீறும் விற்பனையா ளர்களின் உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.