தஞ்சாவூர், மார்ச் 12 - தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூருக்கு சனிக்கிழமை பிற்பகல் வந்தார். தஞ்சாவூர் புதிய சுற்றுலா மாளிகையில் தங்கி யிருந்த ஆளுரை முன்னாள் படை வீரர்கள் நல சங்கத்தி னர் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத் தினர். அப்போது, அரசுத் துறைகளில் முன்னாள் படை வீரர்களுக்கான இடஒதுக்கீடு சாதி அடிப்படையில் மேற் கொள்ளப்படுகிறது. இத னால் முன்னாள் படைவீரர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. மற்ற மாநிலங்களில் முன்னாள் படைவீரர்களுக்கான இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட் டில் மட்டும் பின்பற்றப்படு வதில்லை. முன்னாள் படைவீரர்க ளுக்காக நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக் கீடு செய்யப்படுவதில்லை. இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண் டும். மருத்துவப் படிப்பில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு 1 முதல் 2 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு 3 ஆண்டுகளாக கிடைக் காமல் உள்ள கல்வி உதவித் தொகையை வழங்குவதற் கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மாவட்ட அள வில் ஆட்சியர் தலைமை யில் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம் பல ஆண்டுகளாக நடத்தப்படு வதில்லை. இக்கூட்டம் நடைபெறுவதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை முன்னாள் படை வீரர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக அரசி டம் பேசி நடவடிக்கை எடுப்ப தாக ஆளுநர் உறுதியளித் தார். பின்னர் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத் துக்கு வந்த ஆளுநர் ஆர். என்.ரவியை மாவட்ட நிர்வா கம் சார்பில் கூடுதல் ஆட்சி யர் சுகபுத்ரா மற்றும் நூலகத் தின் ஆயுட்கால உறுப்பினர் சிவாஜி ராஜா பான்ஸ்லே, தஞ்சாவூர் இளவரசர் பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆகியோர் புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர். பின்னர் சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சென்ற ஆளுநர் அங்கிருந்த ஓலைச்சுவடிகள், பழங்கால நூல்கள், அவற்றை கணினி மயமாக்கும் பணிகள் மற்றும் அரியவகை புகைப்படங் கள், சிலைகள், பொருட்கள் ஆகியவற்றை பார்வையிட் டார். பின்னர் தஞ்சாவூர் வர லாற்றை விளக்கும் வகை யில் அமைக்கப்பட்டிருந்த ஒலி-ஒளி காட்சியை பார்வை யிட்டார்.