கும்பகோணம், மார்ச் 16 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட 34 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் செல்வம் மக்கள் செல்வாக்கோடு வெற்றி பெற்றார். இந்நிலையில் கும்பகோணம் மாநகராட் சிக்குடபட்ட 34 ஆவது வார்டில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதன் அடிப்படையில் 34 ஆவது வார்டுக்கு உட்பட்ட பாரதி நகர், அன்பரசி நகர், கிழக்குத் தெரு, லட்சுமி நகர், செந்தமிழ் நகர், அம்பேத் கர் நகர், சத்யா நகர், திருமலை நகர், திரு வள்ளுவர் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, சக்கராயி அம்மன் நகர் இணைப்பு, காந்தி நகர், கிருஷ்ணா நகர், பாலாஜி நகர், துர்க்கை அம்மன் நகர் அரங்க பத்மநாப நகர், சிவஜோதி நகர் விரிவாக்கம், கதர் காலனி, செல்வா காலனி, பவர் நகர், அம்மா நகர், மிஷின் தெரு, ஐஸ்வர்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மண் சாலையை தார்ச் சாலை யாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வடிகால் வாய்க்கால்களை தூர்வாரவும் வாய்க்கால்களை சீரமைத்து பாலம் அமைத்து தரவும் பிரதான பிரச்சனையான குடிநீர், மின்விளக்கு தேவைகளை பூர்த்தி செய்திடவும், கழிவறைகள் அங்கன்வாடி குடிநீர் தொட்டிகள் அமைத்து தர பொது மக்கள் கோரிக்கை வைத்ததின் பேரில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் மற்றும் ஆணையர் செந்தில் முருகன் ஆகி யோரை சந்தித்து மேற்கண்ட நகர்களில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை செய்து தர வலி யுறுத்தி மனு வழங்கினார். மேலும் கும்பகோணம் மாநகராட்சி 34 ஆவது வார்டுகளில் சாலைகள், குடிநீர், மின்விளக்கு, சுகாதார தேவைகளை மாமன் றத்தில் நிறைவேற்றித் தரவும் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் எஸ். வீரமணி மற்றும் மணி உடனிருந்தனர்.