தஞ்சாவூர், ஜூலை 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் விழா மற்றும் அரசியல் பயிற்சி வகுப்பு ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.
வழக்குரைஞர் வீ.கருப்பையா வரவேற்றுப் பேசினார். ‘கட்சி திட்டமும் அமைப்பும்’ என்ற தலைப்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், ‘வர்க்கங்களை திரட்டுதல் மற்றும் நடைமுறை வேலைகள்’ என்ற தலைப்பில், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கப்பட்டது. தீக்கதிர் சந்தா அதனைத் தொடர்ந்து சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு சார்பில் 18 அரையாண்டு, 2 முழு ஆண்டுக்கான தீக்கதிர் சந்தா மாவட்டச் செயலாளரிடம் வழங்கப்பட்டது.