districts

img

தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் புத்தகங்களை அச்சிட புதிய இயந்திரம்

தஞ்சாவூர், மே 9 - தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள பழமையான புத்தகங்களை அச்சிடுவது என முடிவு செய்யப்பட்ட தையொட்டி ரூ.9.40 லட்சம் மதிப்பீட் டில் புதிய அச்சு இயந்திரம் வாங்கப் பட்டுள்ளது. இதன் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.  உலகப் புகழ்பெற்ற 500 ஆண்டுகள் பழமையான சரசுவதி மகால் நூலகத் தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அரிய  வகை ஓலைச் சுவடிகள், காகிதச் சுவடி கள், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ளன. இவற்றை ஆய்வறிஞர்கள் ஆய்வு செய்து நூல்க ளாக பதிப்பித்து வருகின்றனர். இந்நிலை யில் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள அச்சு  இயந்திரத்தை வாங்கி நீண்ட நாட்கள் ஆன தால் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதற்காக ரூ.9.40 லட்சத்தில் புதிய நவீன  இயந்திரம் வாங்கப்பட்டது. இந்த இயந்திரத் தின் மூலம் ரூ.450 மதிப்புள்ள ஒரு கிலோ  வர்ணத்தின் மூலம் 5 லட்சம் பிரதிகள் அச்சி டப்படும். மேலும், 23 ஆயிரம் மதிப்புள்ள டோனர் இயந்திரம் பொருத்தினால் ஒரு லட்சம் பிரதிகள் அச்சடிக்க முடியும். நீண்ட காலம் அழியாமல் இருக்கும் என தெரிவித்த னர்.  இந்நிலையில் புதிய இயந்திரத்தின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். மேலும், ஓலைச்சுவடிகள் மின்னுருவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.