தஞ்சாவூர், டிச.10- தஞ்சை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் இளைஞர் மன்றங்களின் சேவை களை பாராட்டவும், ஊக்கப்படுத்தவும் ஆண்டு தோறும் மாவட்ட, மாநில, தேசிய அள விலான இளையோர் மன்ற விருதுகள் வழங் கப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டு விருதினைப் பெற நேரு யுவகேந்திராவுடன் இணைக்கப் பட்டுள்ள இளைஞர், மகளிர் மன்றங்கள் மாநில சங்க சட்டத்திலும் பதிவு செய்திருக்க வேண்டும். கடந்த 2021 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2022 மார்ச் 31-ஆம் தேதிக்குள் தங்கள் பகுதிகளில் சேவை செய்ததற்கான நற்பணி களை ஆதாரங்களுடன் இணைத்து விண்ணப் பிக்க வேண்டும். மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்ற மாக தேர்ந்தெடுக்கப்படும் மன்றத்திற்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் மன்றம் மாநில அளவி லான விருது போட்டிக்கு தகுதி பெறும். இதற்கான விண்ணப்பத்தை தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை, கணபதி நகரில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் நேரில் அல்லது மின்னஞ்சல் மூலமாக பெற லாம். இந்த விண்ணப்பித்தினை டிச.15-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்’’ என தஞ்சா வூர் மாவட்ட நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் திருநீலகண்டன் தெரிவித்துள்ளார்.