districts

img

குட்கா, புகையிலைப்  பொருட்கள்  விற்ற 109 கடைகள் பூட்டி சீல் வைப்பு

தஞ்சாவூர், செப்.9- தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக மளிகைக் கடை, பெட்டிக் கடைகளில் சோதனை ஏற்க னவே நடத்தப்பட்டு, 109 கடைகளில் இருந்து புகை யிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இது தொடர்பாக கடை உரிமையாளர்கள் விளக்கம்  அளிக்காததாலும், அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி  அளிக்காததாலும் கடைகளை பூட்டி சீல் வைக்க ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்தார். இதன்படி, வெள்ளியன்று தஞ்சை வடக்கு வீதியில் 2 கடைகளுக்கு ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா கந்தபு னேனி ஆகியோர் மேற்பார்வையில், வட்டாட்சியர் மணி கண்டன், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சித்ரா மற்றும் அலுவலர்கள் சீல் வைத்தனர். அதைத் தொடர்ந்து தஞ்சை மாநகரில் 9 கடைகளுக்கும் அதிகாரி கள் சீல் வைத்தனர். தஞ்சை மாநகரில் மட்டும் 11 கடை களுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதேபோல் தஞ்சை மாவட்டம் முழுவதும் ஆட்சியர் உத்தரவுப்படி இன்று 109 கடைகளுக்கு சீல் வைக்கப் பட்டன.

;