தஞ்சாவூர், பிப்.1 - தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுதர்சன சபா இயங்கி வருகிறது, இந்த சபா வில் நாடகம் மற்றும் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் சுதர்சன சபா கடந்த காலங் களில் ராமநாதன் என்பவருக்கு 99 ஆண்டு கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது, நாளடை வில் அந்த சுதர்சன சபா வளாகத்தில் மாநக ராட்சி அனுமதி இன்றி மதுக்கூடம், உணவகம், செல்போன் விற்பனைகடை, பேக்கரி ஆகி யவை தனியாரால் கட்டப்பட்டு அவை அனைத்தும் உள்வாடகைக்கு விடப்பட்டன. மேலும், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையையும் முறையாக கட்ட வில்லை, இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தஞ்சாவூர் மாந கராட்சி ஆணையர் சரவணக்குமார் நடவடிக் கையின் பேரில் மாநகராட்சிக்கு சொந்தமான 40,793 சதுர அடி கொண்ட இடத்தை ஆக்கிர மிப்பாளர்களை வெளியேற்றுதல் சட்டம் 1975 -ன் படி தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து அகற்ற முடிவு செய்தது. இதையடுத்து மார்ச் 1 ஆம் தேதி மாநகராட்சி வசம் கையகப்படுத்தி தண்டோரா போட்டு நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், பொறியாளர்கள் கண்ணதாசன், மகேந்திரன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். மாநகராட்சி கையகப்படுத்திய இடத்தின் மதிப்பு தற்போது சுமார் ரூ.100 கோடி இருக்கும் என தெரிய வருகிறது.