சேலம், ஏப்.8- நெடுஞ்சாலை பராமரிப்பு பணி கள் அனைத்தும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நெடுஞ்சாலை பராமரிப்பு பணி கள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு சாலைப் பணி யாளர் பணி வழங்க வேண்டும். பணி நீக்க காலத்திலும், பணிக்காலத்தி லும் உயிர்நீத்த சாலைப் பணியாளர் களின் வாரிசுகளுக்கு கருணை அடிப் படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்ட பொறியாளர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் எம்.முருகன் தலைமை வகித்தார். இதில், மாநில துணைத்தலைவர் சிங் கராயன், மாவட்ட செயலாளர் ராஜேந் திரன், எடப்பாடி கோட்டத் தலைவர் கலைவாணன் அந்தோணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலா ளர் சுரேஷ், முருக பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், எடப்பாடி நெடுஞ் சாலை கோட்ட பொறியாளர் அலுவ லகம் முன்பும் தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் எண்ணற் றோர் பங்கேற்றனர்.
தாராபுரம்
சாலைப்பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி, பணியாளர்களின் குறைகளை போக்கி வாழையடி வாழையாக தழை தோங்க செய்யக்கோரி வாழை மரங் களை ஏந்தி தாராபுரம் நெடுஞ் சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத்தலை வர் மு.வெங்கிடுசாமி தலைமை வகித் தார். மாநில தலைவர் மா.பாலசுப்பி ரமணியம், கோட்ட செயலாளர் இல. தில்லையப்பன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டப் பொருளாளர் முருகசாமி நன்றி தெரிவித்தார்.