சேலம், ஜூலை 18– சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப் பட்ட டி.எம்.செல்வகணபதி, பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட எடப்பாடி நகராட்சி பகுதிகளில் சேலம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, திறந்த வெளி வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு வியாழனன்று நன்றி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக அரசின் மகளிர் உரி மைத்தொகை, கட்டணமில்லா பேருந்து சேவை, காலை உணவு திட்டம், மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட உன்னத திட்டங்களால், தமிழ்நாடு – புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்றார். இந்நிகழ்வில் எடப்பாடி நகர்மன்றத் தலைவர் பாஷா உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.