districts

தேர்வுக் கட்டணத்தை உயர்த்திய பெரியார் பல்கலைக் கழகம்

சேலம், ஜூன் 23- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என  இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி ஆகியோர்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 1997 இல் உருவாக்கப்பட்டது. இந்த பல்கலைக் கழகம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ண கிரி ஆகிய மாவட்டங்களிலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை இணைத்துச் செயல்படுகிறது. பல்கலைக்கழ கத்தின் கீழ் 27 துறைகள் மற்றும் 113  இணைவுபெற்ற அரசு மற்றும் தனியார் கல்லூ ரிகள் மூலம் இளங்கலை, முதுநிலை மற்றும் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகம் சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கி வருகிறது. சாதி குறித்தான சர்ச்சை யான கேள்வித்தாள் தயாரித்தது முதல் பாலி யல் குற்றச்சாட்டுகள் வரை சிக்கி பல்கலைக் கழக நிர்வாகம் திறனற்று செயல்படுகிறது. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முதல் கடை நிலை ஊழியர் வரை ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாகவே உள்ளது. பெரியார் பல்கலைக்கழகம் தனது நிர்வாக சீர்கேட்டை யும், ஊழல் முறைகேடுகளையும் சரி செய்து  பல்கலைக்கழக நிதி வருவாயை பெருக்கு வதற்கு பதிலாக தேர்வுக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

பெரியார் பல்கலைக்கழகம் 21.06.2024  அன்று திருத்தியமைக்கப்பட்டு பல்கலைக் கழகத் தேர்வு கட்டண அறிவிப்பை வெளி யிட்டது. இளநிலை ஒரு தாளுக்கு ரூ.85 ஆக இருந்ததை தற்போது ரூ.100 ஆகவும், முதுநிலை ஒரு தாளுக்கு ரூ.150 ஆக இருந்ததை தற்போது ரூ.175 ஆகவும், இதே போல பல்கலைக்கழகச் சார்ந்த அனைத்துத் தேர்வு கட்டணங்களையும் உயர்த்தியுள் ளது. எனவே, ஏழை, எளிய மாணவர்களை பாதி க்கின்ற கட்டண உயர்வை உடனடியாக பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப்பெற வேண்டும். 

இவ்வாறு அதில் வலியுறுத்தப் பட்டுள்ளது.