districts

img

காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியை பேசுபொருளாக மாற்றியதில் பெரும் வெற்றி!

சென்னை, செப்.22- காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று  கோரிக்கையை  நாடு முழுவதும் பேசு பொருளாக மாற்றியதில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு முக்கிய பங்கு உண்டு என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் கே.வேணுகோபால் கூறி னார். சென்னையில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னை கோட்டம் 2இன் மாநாட்டை துவக்கி வைத்து  அவர் பேசியதாவது: அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் இன்சூரன்ஸ் ஊழியர்கள் நலனை மட்டுமல்ல  பொதுத்துறை யான காப்பீட்டு துறையையும் பாது காக்க போராடுகிறது. எல்ஐசி மற்றும் ஜிஐசி காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியை எதிர்த்து சமீபத்தில் பிரச்சார இயக்கம் நடத்தினோம். மக்களை அரசு அல்லது காப்பீட்டு நிறு வனம் பாதுகாக்கவில்லை. மக்கள் செலுத்தும்  பிரிமீயம் தான் அவர்களை பாதுகாக்கிறது. அதன் மீது ஜிஎஸ்டி விதித்தால்  அவர்கள் எப்படி தாங்குவார்கள். ஜிஎஸ்டி  மட்டு மல்ல பிரிமீயம் மீது சேவை வரியும் விதிக்கப்படுகிறது. இதற்கு  எதிராக அகில இந்திய அளவில் நடை பெற்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள இரண்டு டிவிசன்களிலும் வலுவான பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்த  கோரிக்கைகைக்கு ஆதரவு திரட்ட நாடு முழுவதும் நாடாளு மன்ற உறுப்பினர்கள் 408 பேரை சந்தித்துப்பேசினோம். நாக்பூர் டிவிஷன் எல்ஐசி ஊழியர்கள் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வலி யுறுத்தியதையடுத்து அவர் ஜிஎஸ்டி யை குறைக்கக்கோரி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனுக்கு கடிதம் எழுதினார். நாடு முழுவதும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட பிரச்சார இயக்கத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பிரச்ச னையை உறுப்பினர்கள் கட்சி வேறு பாடின்றி எழுப்பியதோடு ஒன்றிய அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.  இதன் பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய நிர்மலா சீதா ராமன், ‘என்னால் இந்த விஷயத்தில் ஏதும் செய்ய முடியாது. ஜிஎஸ்டி கவுன்சில் தான் இதுகுறித்து முடி வெடுக்கும்’ என்று கூறினார். சமீ பத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எல்ஐசி மட்டுமல்ல மருத்துவ  காப்பீட்டு பிரி மீயம் மீதான ஜிஎஸ்டியைக் கூட குறைக்கவேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சரவை குழுவுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவரையும் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கொண்டு வர அரசு திட்ட மிட்டுள்ளது. காப்பீட்டு பிரிமீயம் மீது ஜிஎஸ்டி விதித்தால் இது எப்படி சாத்தியமாகும். அரசுக்கே பெரும் சுமையாக இருக்காதா? ஜிஎஸ்டி வரிக்கு எதிராக நாம் நடத்திய பிரச்சார இயக்கம் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறி யது. சமீப காலத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்  நடத்திய வெற்றிகரமாக இயக்கங்க ளில் இதுவும் ஒன்றாகும். 2024 பொதுத்தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை   இதன்  காரணமாக முக்கியமான பிரச்சனைகள் மீது அர சாங்கத்தோடு ஜனநாயக ரீதியாக பேசுவதற்கான வாய்ப்புகள் அதி கரித்துள்ளன. முன்பும் இந்த கோரிக்கையை நாம் எழுப்பினோம். போதிய ஆதரவு கிட்டவில்லை. இப்போது பாஜக கூட்டணி கட்சி யான தெலுங்குதேசம், எல்ஐசி, ஜிஐசி பிரிமீயம் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை  வைத்துள்ளது. அதே நேரத்தில் பாஜக தனது நிலைபாட்டில் இருந்து மாறிவிட்டது என்று கருதக்கூடாது. விசாகபட்டினம் உருக்கு ஆலையை தனியார் மயமாக்கக்கூடாது என்று ஊழியர்கள் போராடி வருகிறார்கள். அவர்களது கோரிக்கைகயை ஆந்திராவை ஆளும் தெலுங்குதேசம், ஜனசேனா கட்சிகள் ஆதரிக்கின்றன. ஆனால் பாஜக தனியார் மயத்தை ஆத ரிக்கிறது. உருக்கு ஆலை மூடப் படாது, அது தொடர்ந்து இயங்கும் என்று அக்கட்சி கூறுகிறது. அப்படி யென்றால் யார் அதை நடத்து வார்கள் என்பதுதான் கேள்வி. அதே நேரத்தில் கூட்டணி கட்சிகளை மீறி ஒன்றிய அரசால் முடிவெடுக்க முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது.  நாட்டில் கார்ப்ரேட் நிறுவனங்கள் மீதான வரி  22 விழுக்காடாக உள்ளது. அதே நேரத்தில் எல்ஐசி ஊழி யர்கள் மீதான வருமானவரி 30 விழுக்காடாக உள்ளது. இதற்கு அரசு என்ன காரணம் கூறுகிறார்கள் என்றால் கார்ப்பரேட்டுகளுக்கு வரியை குறைத்து போடும் போது அவர்களுக்கு உபரியாக இருக்கும் பணம் வேறு தொழிலில் முதலீடு செய்வார்கள் என்றும் அதனால் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இதற்கு உத்தரவாதம் இல்லை. கடந்த கால வரலாறு அப்படியுள்ளது. இருப்பினும் கார்ப்ரேட்டுகள் ஒரு லட்சத்து ரூ. 86 ஆயிரம் கோடிரூபாய் வரிச்சலுகையை அனுபவித்து வரு கிறார்கள். மக்களவைத் தேர்தலின் போது விலைவாசி உயர்வு, வேலை யின்மை முக்கிய பிரச்சனையாக மக்கள் முன்னுக்கு வந்தது. இதன் காரண மாக பாஜக எம்பிக்கள் எண்ணிக்கை குறைந்தது. இருப்பினும் தேர்தலுக்கு பின்னரும் பாஜக கொள்கைகள் பெருமளவில் மாறவில்லை. பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராகவும், கார்ப்ரேட் நிறுவனங்க ளுக்கு ஆதரவாகவும் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு எல்ஐசி என்ற பொதுத்துறை நிறுவனம் பெரிய அளவில் உதவி செய்து வருகிறது. எனவே மக்களின் ஆதரவுடன் எல்ஐசியை தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாக திகழ நமது போராட்டத்தை மேலும்  வலு வாக நடத்த வேண்டியுள்ளது. இவ்வாறு வேணுகோபால் பேசினார்.