நியூயார்க், நவ.12- அமெரிக்காவில் தஞ்சம் கேட்டு விண்ணப்பிக்கும் இந்தி யர்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியர்கள் அமெரிக்காவில் தஞ்சம் கோரி விண் ணப்பிக்கும் அளவு அதிகரித்ததை போ லவே, அமெரிக்க அரசு இந்தியர்களு க்கு ஒப்புதல் வழங்கும் விகிதமும் அதிகரித்துள்ளது. கடந்த 2021-ஆம் நிதியாண்டில் அமெரிக்க அரசிடம் 4,330 இந்தியர்கள் அடைக்கலம் கோரி விண்ணப்பம் செய்த நிலையில் 2023-ஆம் நிதியாண்டில் இது 41,330 ஆக அதாவது 855 சதவீதம் உயர்ந்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டுபாதுகாப்புத்துறை புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 2012-ஆம் நிதியாண்டில் 1,330 இந்தியர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு அமெ ரிக்கா அடைக்கலம் வழங்கியுள்ளது. இந்த எண்ணிக்கை 2022 இல் 4,260 ஆக, அதாவது 3 மடங்கு உயர்ந்துள்ளது. 2023 இல் இது மேலும் உயர்ந்து 5,340 இந்தியர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை கடந்த அக்டோபர் மாதம் அடைக்கலம் பெற்றவர்கள் குறித்தான ஆண்டறிக்கையை வெளியிட்ட போது தெரிய வந்தது. இவர்களில் பெருமைப்பான்மை நபர்கள் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் தஞ்சம் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பானது பல்வேறு தனிப்பட்ட, பொரு ளாதார, அரசியல் காரணிகளால் உருவாகிறது எனவும் அரசி யல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் தஞ்சம் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களில் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது குறிப்பி டத்தக்கது.