districts

img

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தயாராக வேண்டும்!

சேலம், ஜூலை 15- தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப  மருத்துவர்கள் தங்களை தயார்படுத் திக் கொள்ள வேண்டும் என தமிழக  அரசின் கூடுதல் முதன்மைச் செயலா ளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள் ளார். 

இந்திய மருத்துவ சங்கத்தின் சேலம்  கிளையின் சார்பில், மருத்துவர்கள் தின  விழா மற்றும் சிறந்த மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, ஞாயி றன்று அச்சங்கத்தின் அலுவலத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சாதுபக்தசிங் தலைமையி வகித்தார்.  இதில் தமிழக அரசின் கூடுதல் முதன் மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவை ஜெம் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர் பழனிவேலு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து  கொண்டனர். சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஜெமினி, சேலம் அரசு மருத் துவமனையின் முன்னாள் மருத்துவ கண்காணிப்பாளர் தனபால், மருத்து வர்கள் உஷா, ராதிகா, இளங்கோ, ராஜ் குமார், யுவராஜ் ஆகியோருக்கு சிறந்த  மருத்துவர்கள் விருது வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ணன் பேசுகையில், மருத்துவர் பணி என்பது மகத்தான பணி; எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் உயிரை காப் பாற்ற வேண்டிய பொறுப்பு மருத்து வர்களுக்கு உள்ளது. இப்பணியை அவர்கள் திறம்பட செய்வதால் தான் மக் கள் நிம்மதியாக வாழ்கின்றனர். எந்த  நோயாக இருந்தாலும், அது விலங்கிட மிருந்து தான் மனிதனுக்கு வருகிறது என்பது ஆராய்ச்சியில் நமக்கு கிடைத்த அனுபவம். கொரோனாவின் கொடூர தாக்குதலின் முதல் அலை யால், பல்லாயிரக்கணக்கான உயிர் களை பறி கொடுத்ததாகவும், இரண்டா வது அலையின்போது மருத்துவர்க ளின் ஆலோசனைப்படி அரசு நிர்வாகம் செயல்பட்டதால், கொரோனாவை எளி தாக எதிர்கொள்ள முடிந்தது.

மருத்துவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, நோயின் தாக்கத் திற்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய புதிய ஆராய்ச்சிகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். வரும் இளைய தலைமுறை மருத்துவர்களுக்கு மூத்த  மருத்துவர்கள் ஒரு முன்னோடியாக வும், அனுபவமிக்கவர்களாகவும் இருக்க வேண்டும், என்றார்.