விழுப்புரம், மார்ச் 24- மணிமேகலை விருது பெற தகுதி உடைய மகளிர் அமைப்புகள் வரும் ஏப்ரல்.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதியான கிராமப்புற சமுதாய அமைப்புகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த வட்டார இயக்க மேலாண்மை அலகில் வட்டார இயக்க மேலாளரிடம் மற்றும் நகர்ப்புற சமுதாய அமைப்புகள் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, சமுதாய அமைப்பாளர்களை தொடர்பு கொண்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து வரும் ஏப்ரல்.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.