புதுச்சேரி, பிப். 14- குமரி மாவட்டத்தில் பிறந்து புதுச்சேரியில் வாழ்ந்த எழுத்தாளர் பா.விசாலம் திங்களன்று(பிப்.14) கால மானார் அவருக்கு வயது 89. தோழர் விசாலம் அவரது கண வர் ராஜ் (ஸ்டீல் லைட் ) இருவரும் கம்யூ னிஸ்ட் கட்சியில் பணியாற்றி வந்தார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பா. ஜீவானந்தம், பி. இராம மூர்த்தி, ஏ.கே. கோபாலன், வி.பி.சிந்தன், எம்.ஆர். வெங்கட்ராமன் ஆகியோரோடு நெருக்கமாக இணைந்து பணியாற்றி வந்தவர் தோழர் பா.விசாலம். புதுச்சேரியின் மகத்தான தலை வர்களான தோழர்கள் வா. சுப்பையா, சரஸ்வதி சுப்பையா ஆகியோருடன் இணைந்து பணியாற்றி வந்தனர். மாதர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாகப் பணியாற்றினார் தோழர் பா விசாலம். 1960-களில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் வழிகாட்டுதலில் சரஸ்வதி பத்திரிகையில் சிறுகதை எழுதி னார். 1990-களில் அவரது சுய வர லாற்று நாவலான “மெல்லக் கன வாய் பழங்கதையாய்”என்ற நூலும், 2001-இல் “உண்மை ஒளிர்க என்று பாடுவோம்” என்ற இவரது நாவலும் தமிழ் உலகில் பெரிதும் பேசப்பட்டது. இடதுசாரி இயக்கங்களோடு நெருங்கி பயணித்த எழுத்தாளர் பா.விசாலத்தின் கணவர் ராஜ் 2018 ஆம் ஆண்டு கால மானார். புதுச்சேரி தாகூர் நகரில் மகள் சித்ரா உடன் வசித்து வந்த எழுத்தாளர் பா. விசாலம் உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார். சிபிஎம் மறைந்த எழுத்தாளர் பா. விசா லத்தின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் எஸ். ராமச்சந்திரன், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பிரதேசத் தலைவர் அரிகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர்கள் விசாலத்தின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் பிரதேச குழு கூட்டத்தில், செயலாளர் இரா. ராஜாங்கம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.