districts

கைத்தறி நெசவாளர்களின் படைப்புகள் சென்னையில் நேரடியாக விற்பனை

 சென்னை, ஜன.4- கைத்தறி நெசவாளர்கள் தங்களின் படைப்புகளை மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் 2023 ஆம் ஆண்டிற்கான சூதா பஜார் ராயப்பேட்டை அமேதிஸ்ட் வளாகத்தில் புதனன்று (ஜன.4) தொடங்கியது. வரும் 6 ஆம்தேதி வரை நடைபெற வுள்ள இந்த சந்தையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த  கைவினை ஞர் கலைஞர்களின் சமகால வடிவமைப்பு களில் தயாரன கைவினை பொருட்கள் இடம்பெற்றுள்ளன. புடவைகள், பிளவுசுகள், குர்தா செட்கள், ஆண்கள் உடைகள், ஆடை கள், அணிகலன்கள் மற்றும் வீட்டு அலங்காரங்கள்  இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. புவனேஸ்வரத்தை சேர்ந்த சுஜாதா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியின் முன்னாள் மாணவியாவார். அவரது சகோதரி தனியாவுடன் இணைந்து உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடி யாக நுகர்வோருக்கு கைத்தறி தயாரிப்பு களை விற்பனை செய்ய சுதா என்ற அமைப்பை  நிறுவினார். இந்த அமைப்பில் தற்போது நாடு முழுவதும் 17ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இணைந்துள்ளனர். அவர்களில் பலரது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இத்தகைய சந்தைகள் மூலம் அவர்களுக்கு நிலையான வருமான ஆதாரத்தை உறுதி செய்வதும்,  பாரம்பரிய கலை வடிவங்கள் அழியாமல் காப்பதே இந்த கண்காட்சியின் நோக்கம் என்று சுஜாதா தெரிவித்தார்.