districts

img

மக்களின் தேவைகள் அடிப்படையில் பணிகள்: மாவட்ட திட்டக்குழு தலைவர்

கள்ளக்குறிச்சி, செப். 27- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் புவனேஸ்வரி பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வ ராணி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்த கூட்டத்தில் மாவட்ட திட்ட குழு தலைவர் பேசுகையில்,“ மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதற்கு சான்றாக சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கானோர் வேலை பெற்றுள்ளனர்”என்றார். வளர்ச்சி பணிகள் தேவைகள் என்பதை மாவட்ட திட்டக்குழு மூலம் கண்டறிந்து பொது மக்களின் தேவைகளின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.