கள்ளக்குறிச்சி, ஜூலை 27-
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பு அம்சங்களை பெண்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என தன்னார்வலர்களுக்கு என பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடக்கீர னூர் வடபொன்பரப்பி, மூரார்பாளையம், தென்பொன்பரப்பி, கனியாமூர் மற்றும் கீழப்பாளையம் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் கலைஞர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்களை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்தி கேயன், உதயசூரியன், மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் புவ னேஸ்வரி பெருமாள், மாவட்ட வரு வாய் அலுவலர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.