சென்னை,ஆக.21-
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மேரி. மூதாட்டியான அவர் திங்களன்று காலை அண்ணா சதுக்கம் அருகே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த காவல்துறை வாகனம் மேரி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற னர்.