districts

img

பத்து ஆண்டுகளாய் தொடரும் எல்ஐசி ஊழியர்களின் லட்சியப் பயணம்

எளிய மக்களின் நம்பிக்கை எல்லையாக திகழும் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகி றது. காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சென்னைக் கோட்டம்-2 (வட சென்னை - திருவள்ளூர் மகளிர் துணைக்குழு), கடந்த 20  ஆண்டுகளாய் சமூகநல பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இயங்கி வருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக, எளிய குடும்பங்களிலிருந்து அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்கவும், பள்ளிகளின் அடிப்படை வசதிகளை  மேம்படுத்தவும், ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு பாடுபட்டு வருகிறது.   எதிர்கால தலைமுறையினரை சமூகப் பொறுப்பாளர்களாக உருவாக் ்கிடும் லட்சியத்தோடு,  அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுடன் கரம் கோர்த்து, இப்பணியினை செய்து வருகிறது. பள்ளிக்கும் மாணவர்களுக்கும் தேவைகள் ஏராளம் இருப்பினும். தங்க ளால் இயன்றதை  தன்னடக்கத்துடன் மகளிர் துணைக் குழு செய்து வருகிறது.

 கருணையை கடந்து...
ஆதரவற்றோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் என கருணை இல்லங்களை நோக்கியே துணைக்குழுவின் கால்கள் பயணித்தன. அதைக் கடந்து, கல்வி நிலையங்களை நோக்கி பயணிக்கத் தொடங்கினர். கருணை உதவிகள் தற்காலிகத் தீர்வு மட்டுமே. ஆனால், எளிய மக்களுக்கு தரமான கல்வியை கிடைக்கச் செய்தால், தானும் வளர்வதோடு, சமூகத்தையும் வளரச் செய்யமுடியும். அத்தகைய நற்சிந்தனையோடு 2010ஆம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளை நோக்கி பய ணத்தை தொடங்கியது மகளிர் துணைக் ்குழு. அப்போதைய திருவொற்றியூர் நகராட்சி தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியின் முதல் மண்டலம். மக ளிர் துணைக்குழுவின் முதல் பய ணம், திருவொற்றியூர் பகுதி இராமநாதபுரம் அரசு ஆரம்பப் பள்ளியை நோக்கியே இருந்தது. 225 மாணவர்களோடு அந்தப் பள்ளி இயங்கி வந்தது. இந்தப் பள்ளிக்கு அருகா மையில் இயங்கி வரும் தனியார் பள்ளி மாணவர்கள், பளிச் யூனிபார்ம் அணிந்து டை கட்டி செல்வதை கண்ட அரசுப்பள்ளி மாணவர்களின் ஏக்கத்தை போக்கினர். ரூ.52ஆயிரம் மதிப்பீட்டில், யூனி பார்ம் மற்றும் இதரப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அந்த மாணவர்களோடு, இன்று தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களும் நூற்றுக்கணக்கில் வந்து அரசுப் பள்ளியில் கல்வி பயில்கின்றனர். இதைவிட மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஏதே னும் உண்டோ! இத்தகைய பெருமைமிகு பள்ளியின் இன்றைய தலைமை ஆசிரியையாக திறம்பட பணியாற்றி வருபவர் முத்துச்செல்வி. ஆரம்பப் பள்ளியில் இருந்து நடுநிலைப்பள்ளி யாய் உயர்ந்திருக்கும் இப்பள்ளிக்கு 4.12.2021 அன்று 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மடிக்க ணினி, பச்சை வண்ண எழுத்துப் பலகை கள், மேசைகள், குழந்தைகள் அமர நாற்காலிகள், கோவிட்மற்றும் கழிவறை பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவைகளை மகளிர் துணைக்குழுவினர் வழங்கினர். தலைமை ஆசிரியை உட்பட 10 பெண் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணியினால், அனைத்துப்பிரிவு மக்களின் அன்பைப் பெற்றுள்ளது இராமநாதபுரம் அரசு நடுநிலைப்பள்ளி.

அறம் வளர்ந்தது அகம் மகிழ்ந்தது
மகளிர் துணைக்குழுவினரின் பணி 52 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, பல்கி பெருகி 10 பள்ளிகளுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்ந்து நிற்கிறது. இந்நிதியினை மொத்தமாக நன்கொடை வடிவில் பெறுவதில்லை. ஒரு தேநீரின் தொகை யான 10 ரூபாயை குறைந்தபட்சம் மாதந்தோறும் ஒவ்வொரு ஊழியர் ்களிடமிருந்து பெற்று, அதனை சேமித்து, ஆண்டுக்கு ஒரு அரசுப்பள்ளி என்கிற திட்டமிடலோடு, சமூக அக்கறையோடு இப்பணியினை செய்து வருகிறது மகளிர் துணைக்குழு. கூடுதலாக தேவைப்படும் தொகை நன்கொடையாக பெறப்படுகிறது.

அரசுப் பள்ளிகளை அரவணைக்கும்...
2010ல் துவங்கிய காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சென்னைக் கோட்டம்-2ன் (வடசென்னை - திருவள்ளூர் மகளிர் துணைக்குழு), இதுவரை ஏழை மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ரூ.14,82,000 செலவிட்டுள்ளது; உதவிகள் இன்னும் தொடர்கிறது. இவற்றோடு... பெரு மழை, இயற்கை பேரிடர்கள், கோவிட் பெருந்தொற்று உள்ளிட்ட நெருக்கடி காலகட்டங்களில் மதிப்புமிக்க எளிய உழைப்பாளி மக்களுக்கு பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தொடர்ச்சியாக வழங்கி வருவதோடு, இதர நடுத்தர வர்க்க தொழிற்சங்க இயக்கங்களுக்கும் ஊக்கமளித்து வருகிறது. கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு நிர்கதியாய் நின்ற மக்களின் கண்ணீரை துடைத்து, மறு வாழ்வு கொடுத்த மகத்தான நிறு வனம் எல்ஐசி–தான். வேலைவாய்ப்புகளும் - சமூக  நீதியும் நிலைத்திருக்க வேண்டு மெனில், எல்ஐசி உள்ளிட்ட பொதுத்து றைகள் காக்கப்பட வேண்டும். சமூகப் சிந்தனையை விதைப்பதற்கான எளிய பங்களிப்பே இக்கல்வி உதவிகள். எல்ஐசி மகளிர் துணைக்குழுவினை போல், இதரப் பொதுத்துறைகளில் இயங்கி வரும் மகளிர் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டால், அழகான  சமூக த்தை மலரச் செய்யலாம்!

ஆர். ஜெயராமன்

மாவட்டச் செயலாளர் சிஐடியு - வடசென்னை