districts

குளத்தில் குளிக்க சென்ற மாணவன் பலி

 சிதம்பரம், ஜூலை 21-

    சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் மகன் மணிகண்டன்( 13)  இவர் அண்ணாமலை நகரில் உள்ள ராணி சீதை ஆச்சி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த மாணவனின் பாட்டி வீடு சிதம்பரம் அருகே உள்ள சிதம்பரம் நாதன் பேட்டையில் உள்ளது. அங்கு நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் உள்ள குளத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 21) குளித்தபோது நீரில் மூழ்கி பலியானார்.

   பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாமலை நகர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.