கிருஷ்ணகிரி, டிச. 30 - ஓசூர் மாநகராட்சியில் மூன்று மடங்காக உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஒசூர் மாநக ராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சாலை சீரமைப்பு, கழிவுநீர் கால்வாய், குடிநீர், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதி களை நிறைவேற்ற கோரி இந்தப் போரா ட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட் ்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி. சேகர், ஒன்றியச் செயலாளர் ராஜா, மாநகரக் குழு உறுப்பினர்கள் பிஜி.மூர்த்தி, ரவி, எம்.எம்.ராஜு, நாகேஷ் பாபு, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த மாநகராட்சி ஆணையர் பாலசுப்பி ரமணியன் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும், பாரதி நகர் விஸ்வநா தபுரம் இடையே உள்ள கால்வாயின்மீது பாலம் அமைக்கவும், தின்னூர் மயானத் திற்கு சாலை அமைப்பதோடு மின் தகன மேடை வசதி ஏற்படுத்தவும், உறுதி அளித்தார். மத்திகிரி சமுதாயக் கூடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் ஒப்புக் கொண்டார். மேலும், உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை திரும்பப் பெறுவது குறித்து தமிழக அரசுக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் கடிதம் எழுதுவதாகவும் தெரிவித்தார்.