சென்னை, மார்ச் 8- சென்னையில் புதியதாக அமைய உள்ள 3 பாலங்களின் கட்டுமான பணியை நகராட்சி நிர்வாகத் துறைஅமைச்சர் கே. என். நேரு, இளைஞர் நலன் மற்றும்விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் புதனன்று (மார்ச் 8) அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தனர். தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி. ஐ. டி. நகர் பிரதான சாலையில் ரூ.131 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாலம், வியாசர்பாடி ரூ.142 கோடிமதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம், மணலி சாலை யில் ரூ.96.04 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக் கும் பணிகளை இவர்கள் தொடங் கிவைத்தனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைஅமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும்அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , மேயர்ஆர். பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, அமைச்சர்கள் இராயபுரம் மண்டலம், வார்டு 62க்குட்பட்ட சிந்தாதிரிபேட்டை, அருணாசலம் சாலையில் ரூ.9.55 கோடி மதிப்பீட்டில்புதிதாக கட்டப்பட்ட பாலத்தினை பார்வை யிட்டனர். நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பெரம்பூர் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத் தின் போது, மக்களின் கோரிக்கை கள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி கொடுத்தேன். அந்தக் கோரிக்கையின் அடிப்படையில் தற்போது தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க.நகர்மண்டல த்திற்குட்பட்ட கணேசபுரம் சுரங்கப் பாதையின்மேல் ரூ.142 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இந்தப் பணியானது 18 மாதங்களில் முடிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில், வட சென்னை நாடாளுமன்ற உறுப்பி னர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி (தியாகராய நகர்) ஆர்.டி.சேகர் (பெரம்பூர்), தாயகம் கவி (திரு.வி.க.நகர்), ஜே.ஜே.எபினேசர் (ஆர்.கே.நகர்), ஐட்ரீம் ஆர்.மூர்த்தி (ராயபுரம்), துணை மேயர் மு.மகே ஷ்குமார் , ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.