சென்னை,பிப்.7- 30 ஆண்டுகளாக கிடைக்காத பட்டா கிடைத்த மகிழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரி வித்திருப்பதாவது: பல ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகளைக் கட்டி குடியிருப்போருக்கு ஒரு முறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ், வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் சில கிராம கணக்குகளில் பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள விவ ரங்கள் அரசின் கவனத்திற்கு அண்மையில் தெரியவந்துள்ளது. இவற்றின் மீது உரிய திருத்தங்கள் செய்து பட்டா வழங்கு மாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டிருந்தார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்த 5,288 பயனாளிகளுக்கு பட்டா வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு வரு கின்றன. இதில் முதல் கட்டமாக குன்றத்தூரில் கடந்த ஆண்டு நவம்பரில் 3,008 பயனாளி களுக்கு ரூ. 56 கோடியே 45 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக உத்தரமேரூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 2,249 பயனாளி களுக்கு ரூ. 18 கோடியே 92 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்கள் ஜன.30 அன்று வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் ரூ. 75 கோடியே 37 லட்சம் செலவில் 5,257 பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக, தங்க ளுக்கு பட்டா கிடைக்காமல் வீடுகள் கட்ட வும், வங்கிகளில் கடன் பெறவும் முடியா மல் இன்னல்களை அனுபவித்து வந்த பொது மக்கள், முதலமைச்சர் பிறப்பித்த உத்தர வின் படி, பட்டா கிடைத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பட்டா வழங்க நட வடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோருக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.