districts

img

போராடினால் தான் வேட்டி சேலை

சென்னை, ஜன. 10- பொங்கல் பரிசு தொகுப்புடன் அனைவருக்கும் முழுமையாக வேட்டி சேலை கிடைக்க போராட வேண்டி யுள்ளது. திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டில் 7 ரேசன் கடைகள் உள்ளன. சுமார் 7,500 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இந்நிலையில் முல்லை நகர் நலச்சங்க நிர்வாகிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக வேட்டி சேலை வழங்குவதில்லை என்று மாமன்ற உறுப்பினரிடம் புகார் தெரி வித்தனர். இதையடுத்து மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் நிர்வாகி களுடன் ரேசன் கடைக்கு சென்று விவரம் கேட்டறிந்தார். 1,377 குடும்ப அட்டைகள் உள்ள அந்த கடைக்கு  300 புடவையும் 500 வேட்டி மட்டுமே  வந்துள்ளது. அதை முன்னால் வருபவர்களுக்கே முடிந்து  விடுகிறது என்று ஊழியர் தெரிவித்து ள்ளார். வருவாய் துறை வட்டாச்சி யரை தொடர்பு கொண்டு கேட்ட போது அந்தப் பணி நாங்கள் பார்ப்பதில்லை. நுகர்பொருள் வாணிபக் கழகம் கொடுக்கும் பட்டியலைத்தான் நாங்கள் அனுப்புகிறோம். நுகர்பொருள் வாணிபக் கழகம் குறைத்து விட்டார் கள் என தெரிவித்துள்ளார். நுகர் பொருள் வாணிபக் கழக துணை ஆணையரை தொடர்பு கொண்டு கேட்ட போது அது எங்கள் பணி கிடை யாது. வருவாய் துறை அனுப்பும் பட்டி யல் அடிப்படையில், நாங்கள் விநி யோகம் மட்டுமே செய்கிறோம் என்று கூறியுள்ளார். இதையடுத்து 7 கடைகளுக்கும் முழுமையான வேட்டி சேலை வரு வதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கூறி சுமார் 2 மணி நேரம் கடை யிலேயே உட்கார்ந்திருந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த சிவில் சப்ளை கண்காணிப்பாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் 7 கடைகளுக்கும் கூடுதல் வேட்டி சேலை வழங்க ஒப்புதல் அளித்தனர். அதனடிப்படையில் உடன டியாக 900 வேட்டி, 900 சேலைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இரண்டு நாட்களில் மீதமுள்ள 240 அனுப்பி வைக்கப்படும் என்ற உத்தரவாதம் அளி த்தனர். மற்ற கடைகளுக்கும் 80 விழுக்காடு வேட்டி சேலைகள் அனுப் பப்பட்டுள்ளன. கோரிக்கையை ஏற்று கூடுதலாக வேட்டி, சேலை அனுப்பி ஒத்துழைப்பு வழங்கிய நுகர்பொருள் வாணிபக் கழக துணை ஆணையர், திருவொற்றி யூர் வட்டாட்சியர் ஆகியோருக்கு மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் நன்றி தெரிவித்தார்.