districts

img

வண்டலூர்: வங்க புலி உயிரிழந்தது

வண்டலூர்: வங்க புலி உயிரிழந்தது செங்கல்பட்டு,பிப்.21- வண்டலுார் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும், விஜயன், 21 என்ற ஆண் வங்கப்புலிக்கு, ஜன., 24  முதல் உணவு உட்கொள்வது குறைந்தது. இதையடுத்து, புலிக்கு ரத்த மதிப்பீடு செய்ததில், கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புக் குள்ளானது தெரிய வந்தது. இதை யடுத்து, தமிழ்நாடு கால்நடை  மருத்துவ பல்கலைக் கழகத்தின் ஆலோசனையுடன், சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், வயிறு இரக்கம் ஏற்பட்டு, சோர்வாக இருந்த வங்கப்புலிக்கு, பூங்கா மருத்துவ குழுவினர், தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, வங்கப்புலி விஜயன், செவ்வாயன்று இரவு  இறந்தது. இதையடுத்து, புலியின் உடல் பிரேத பரிசோதனை  செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.