districts

சிஐடியு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து வி.ரவிசங்கர் நீக்கம்

சென்னை, மார்ச்.21- சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு ஏர்கண்டிஷன், ரெபிஜிரேஷன் இன்ஜினியரிங் & டெக்னீஷன் யூனியனின் தலைவரான வி.ரவிசங்கரை சங்கப் பொறுப்பிருந்து நீக்குவதாக சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன்  ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  ‘‘தமிழ்நாடு ஏர்கண்டிஷன், ரெபிஜிரேஷன் இன்ஜினியரிஸ் &  டெக்னீஷன் யூனியனின் (TAMILNADU AIRCONDITION, REFRIGERATION ENGINEERS & TECHNICIANS UNION) தலைவரான வி.ரவிசங்கர் சங்க கூட்டங்களை முறையாக ஒப்புதல் பெறாமலும் நிதி மற்றும் வரவு-செலவு கணக்குகளை முறையாக காட்டாமலும்,  சங்கத்தின் பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளு டன் இணைந்து சங்கத்தை நடத்தாமலும், தொழிற்சங்க ஜன நாயக ரீதியாக சங்கத்தை செயல்படவிடாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் பிரச்சனையில் சிஐடியு மாநிலக்குழு சார்பில் சங்கத்தின் ஒற்றுமையையும், கூட்டுத்தலைமையையும் உத்தரவாதப்படுத்த எடுத்த முயற்சிகளுக்கு ஒத்துழைக்காமல் சங்க விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் வி.ரவிசங்கர் தொடர்ந்து சிஐடியுவின் கோட்பாடுகளுக்கு  விரோதமாக செயல்பட்டு வருவது குறித்து விளக்கம் கோரி அளிக்கப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்காமல் தொடர்ந்து அலட்சியப் படுத்தி வருவது குறித்து சிஐடியு மாநிலக்குழு பரிசீலனை செய்ததில்,  வி.ரவிசங்கரை சிஐடியு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்பி லிருந்து நீக்குவது என்றும், சங்கத்தின் சிஐடியு இணைப்பை ரத்து செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, சிஐடியு மாவட்டக் குழுக்கள் மற்றும் சிஐடியு சங்கத்தைச்  சார்ந்த தோழர்கள் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள  வேண்டாம் என்று சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள் கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.