சென்னை, ஜன. 12 - தாம்பரம் மாநகராட்சிக்கு கட்டணங் களை செலுத்த புதிய செயலியைப் பய ன் படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சொத்து வரி விதிக்கப்படாமல் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்கள், மண்டல அலுவலகங்களில் உள்ள வரி வசூல் மையங்களில் விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மனுக்கள் பெறப்பட்ட 15 தினங்க ளுக்குள் புதிய சொத்து வரி விதிக்கப்படும். சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்தாலும் 15 தினங்களுக்குள் பெயர் மாற்றம் செய்யப்படும். இதில் கால தாமதம் ஏற்படின் மாநகராட்சி வருவாய் அலு வலரிடம் 9677257155 புகார் தெரிவிக்கலாம். புதிய சொத்து வரி, காலிமனை வரி, பெயர் மாற்றம், கட்டிட அனுமதி, தொழில் வரி மற்றும் தொழில் உரிமக் கட்டணம் போன்ற இனங்களுக்கு https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தொழில் உரிமக் கட்டணம், கட்டிட அனுமதி கட்டணம் மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ் போன்ற அனைத்து செயல்பாடுகளுக்கும் TN Urban ESevai என்ற கைபேசி செயலியை பயன்படுத்து மாறு மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.