கள்ளக்குறிச்சி, மார்ச் 31- விழுப்புரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளர் துரை. ரவிக்குமாரை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே வாக்காளர்க ளிடையே உரையாற்றினார். அவர் பேசுகையில், ஒன்றிய பாஜக அரசு எதிர்க்கட்சிகளை எப்படி பழி வாங்கு கிறது என்பது உங்களுக்கு தெரியும் பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்த கட்சிக ளுக்கு அவர்கள் என்ன சின்னம் கேட்கி றார்களோ அது கொடுத்து விட்டார்கள் ஆனால் நம்முடைய கூட்டணி கட்சிகள் ஒவ்வொரு சின்னத்தை பெறுவதற்கு மிகப்பெரிய சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. இன்றைக்கு எதிராளிகள் எல்லாம் மூன்று அல்லது நான்கு அணி களாக பிரிந்து வந்திருக்கிறார்கள் ஆகவே மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பானை சின்னத்தை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றார். மதுரையில் ஒன்றிய அரசு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு செங்கல் வைத்து அடிக்கல் நாட்டினர். அதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை ஆனால் அதன் பிறகு மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கப்பட்டு திறப்பு விழா செய்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வேட்பாளர் துரை ரவிக்குமாரை வெற்றி பெறச் செய்தால் உளுந்தூர்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கலைக்கல்லூரியை கட்டாயம் அமைத்து தருவோம் என பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் மத்தியில் பேசினார்.