கள்ளக்குறிச்சி, ஏப். 10 - ரிஷிவந்தியத்தில் பொறியியல் கல்லூரி தொடங்கப்படும் என்றும். ஓசூரில் விமான நிலையம் அமைக்கப் படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்தும், கிருஷ்ண கிரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் அண்மையில் பிரச்சாரம் செய்தார். கள்ளக்குறிச்சியில் அவர் பேசுகையில், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி இடையே நான்கு வழிச்சாலை, ரிஷிவந்தியம் மற்றும் நயினார் பாளையத்தில் புதிய தீயணைப்பு நிலையம், திருக்கோவி லூர் பகுதிக்குட்பட்ட கூவனூரில் மேம் பாலம் ஆகியவை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உளுந்தூர் பேட்டையில் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் காலனி உற்பத்தி தொழிற் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
வாக்குறுதி
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புதிதாக கள்ளக் குறிச்சி நகரில் ரிங் ரோடு அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும். தியாக துருகம் சாலையில் பயணிகள் விடுதி அமைத்து தரப்படும். கள்ளக்குறிச்சி நகரத்தின் மையத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படும். ரிஷிவந்தி யம் பகுதியில் புதிதாக அரசு பொறியி யல் கல்லூரி தொடங்கப்படும் என்றார். கிருஷ்ணகிரியில் அவர் பேசுகை யில், ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஓசூரில் மாவட்ட மருத்துவமனை, 233 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எண்ணே கொல் திட்டம், ரூ.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓசூரில் புதிய பேருந்து நிலையம், 575 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், உள்வட்ட சாலைகள், சாலைகள் விரிவாக்கம் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாக்குறுதிகள்
ஓசூரில் விமான நிலையம், கிருஷ்ணகிரி வழியாக ஓசூர் ஜோலார் பேட்டை ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வால்மீகி சமுதாயத்தினரை பழங்குடியின பட்டிய லில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்படும். எருது விடும் விழா தொடர்பாக இதுவரை பதிவு செய்யப் பட்டுள்ள அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்றார் இயற்கை பேரிடரில் தமிழ்நாடு பாதிக்கப்பட்ட போது எட்டிப்பார்க்காத பிரதமர் மோடி, தோல்வி பயத்தில் தற்போது தொடர்ந்து வந்து கொண்டி ருக்கிறார். இதுவரை அவர் சொன்ன எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை. எனவே தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.